Sunday, February 28, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா... Mixed Reactions of me..

விண்ணைத்தாண்டி வருவாயா விமர்சனம் எல்லாம் இல்ல.. எனக்கு படம் எடுக்க தெரியாது.. அதனால நான் விமர்சனம் பண்றது சரியில்ல.. ஆனா படம் பார்க்க தெரியும்.. நான் என்ன பீல் பண்ணேன்னு எழுதலாம் அப்படின்னு நெனச்சேன்.. எழுதுறேன்..

முதல் பாதி...

சிம்பு த்ரிஷா கடலை..

சிம்பு பார்த்தவுடன் காதல்.. ஒபெநிங் சாங் இல்லை ஆனால் பெயர் போடும்போது யெங் சூப்பர் ஸ்டார் என போடப்படுகிறது..(ஐயஹோ!!!!!)

தன்னைவிட ஒரு வயசு அதிகமான பொண்ண (த்ரிஷா) பார்த்தவுடன் லவ் பண்றார் நம்மாளு (சிம்பு).. திரிசாவுக்கு அப்போ குழப்பம் வேணுமா வேண்டாமான்னு.. அப்போ ஆரம்பிக்குது கடைசிவரைக்கும் அது தொடருது...

கொஞ்ச நேரம் லவ் பண்றார் அப்பறம் நண்பர்களா இருப்போம்னு சொல்றார்.. மெல்லவும் முடியல துப்பவும் முடியல..

சிம்பு கேரளா போயி த்ரிஷாவ டாவடிக்கிறார்.. வரும்போது ட்ரைனில் சந்திக்கிறார் த்ரிஷாவ (wanted ஆ தான்) அப்பறம் முத்தங்கள் உதட்டிலும்!!!

அடுத்தநாள் தான் வந்து கேக்கிறார்.. நண்பர்கள் இப்படி தான் behave பண்ணுவாங்களா அப்படின்னு.. குழப்பமா த்ரிஷா ??

இரண்டாம் பாதி..
டைரக்டர் சிம்பு..



Asst. Director சிம்பு ... படத்தில் பணிபுரிகிறார்..

காதலில் விரிசல் (சத்தியமா தெரியல எதுக்காக த்ரிஷா வேணாம்னு சொல்றங்கன்னு.. கொஞ்ச நாள் பேசலைன்னா காதல் போயிடுமா?? என்ன பாஸ் இது????!!! என்னவா வேணும்னாலும் இருக்கட்டும் SMSஅனுப்பி காதலை கட் பண்றது ரொம்ப over ஆமா..)

அப்பறம் டைரக்டர் ஆகிறார் சிம்பு..

எஸ்....
த்ரிஷா மேல் வைத்த காதலை படமாக எடுக்கிறார்..

அவ்ளோ தான்...




படம் முழுக்க இருந்தவை.....


பேசுறாங்க... எல்லாரும் பேசுறாங்க .. Englishla பேசுறாங்க.. தமிழ்ல பேசுறாங்க.. தங்க்லீஷ் ல பேசுறாங்க....

அய்யா கெளதம்.. நீங்க ஹாலிவுட் ரேஞ்சுல தமிழ்படம் எடுக்க முயற்சிக்கிரிங்க.. ஆனா அதை நம்ம மொழியிலேயே ட்ரை பண்ணலாமே? ஏற்கனவே பசங்க எல்லாரும் இப்போ i love you சொல்றதில்ல (உங்க புண்ணியத்துல) .. எல்லாரும் i am in love with you தான் சொல்றாங்க.. அந்த cameraman கேரக்டர் நல்ல பண்ணி இருந்தாரு.. ஆனா அவருக்கு இங்கிலீஷ் பேசுறதுக்கு கஷ்டமா இருக்கு .. ஏங்க அவர கஷ்டப்படுத்துறீங்க? அவருக்கும்மா வைக்கணும்?

மத்தபடி படம் பாக்குறதுக்கு குளிர்ச்சியா இருந்தது.. நல்ல இசை.. (இசை புயல் இல்ல இசை தென்றல்)..

மத்தபடி எனக்கு உங்களால suspense வைக்க முடியல.. I guessed it already.. so better luck next time..

ஏற்கனவே வடிவேலு இந்த படத்தின் கதையை சொல்லிவிட்டார் .. எப்படின்னு கேக்குறிங்கள??...
!!!!!த்ரிஷா இல்லன்ன திவ்யா...!!!!!!!!




விண்ணைத்தாண்டி வருவாயா.. 'A' center தாண்டி வராதுன்னு நினைக்கிறேன் .. ஆல் தி பெஸ்ட் ...

Wednesday, February 24, 2010

பயணங்கள் முடிவதில்லை... மங்களூர்..

எனக்கு வேலை சுத்துறது ...

இந்தியாவுல கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களுக்கும் போயாச்சு.. வடகிழக்கு மாநிலத்துக்கு தான் இன்னும் எனக்கு சான்ஸ் கிடைக்கல...

எல்லா ஊர்களுக்கும் போறப்போ ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும்... பஸ், ரயில், பிளேன் என மாறி மாறி போனாலும் ரொம்ப பிடித்தது ரயில் பயணம் தான்... சுகமான தாலாட்டு.. காலாற நடை.. அவசரத்துக்கு போறதுக்கு பிரச்னை இல்ல..

அதைப்போல ஒரு பயணம் தான் சென்னை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிடைச்சுது..

சென்னைல இருந்து சாயங்காலம் அஞ்சு மணிக்கு கிளம்பி மறுநாள் காலைல ஒன்பது மணிக்கு கொண்டு போய் சேர்ப்பான்..

ஆனா அந்த எழு மணியில இருந்து ஒன்ம்பது மணிவரைக்கும் கேரளா கரை ஓரமா வண்டி போகும் பாருங்க.. சுகம்...

தென்னை மரம்..
அப்பப்போ கடக்குற ஆறுகள்..
ஆற்றோரமா இருக்கிற வீடுகள்..
அவங்களுக்குன்னு இருக்குற கட்டுமரம்...
சில்லுன்னு காத்து...
ரொம்ப இடம் வளைச்சு கட்டி இருக்கிற வீடுகள்..
கேரளா பெண்குட்டிகள்...
எல்லாமே அழகா இருக்கும்..

அதெல்லாம் தாண்டி...

மங்களூர்...

கேரளா கர்நாடக எல்லைல இருக்கிற முக்கியமான கர்நாடக நகரம்..

இங்கே காற்றும் இருக்கும் வெயிலும் இருக்கும்... மலைமேல் இருக்கிற நகரம்.. மீன்பிடி துறைமுகம் இருக்கு... மலையும் கடலும் இணையும் இடம்.. கிட்டத்தட்ட சென்னை மாதிரி வெயில் சுடும்.. அப்பப்போ மழையும் பெய்யும்..

இங்கே சிறப்பு ..

நிறைய நல்ல நல்ல இடங்கள் இந்த நகரத்தை சுற்றி உள்ளன..

கொல்லூர்..
குதிரமுக்...
உடுப்பி..
மல்பே..

இன்னும் நிறைய இடங்கள்... எனக்கு தெரிஞ்சத சொல்றேன் அவ்வளவு தான்.. அப்பறம் இங்கே இருந்து கோவா போறதுக்கு ரயில் பயணம் மிக மிக அருமையானது... கொண்கன் ரயில்வேஸ் இயக்குகிறது.. இது ஒரு அழகான ரயில் பாதை ஆகும்..

மங்களூர்இல் இருக்கும் பெண்கள் இயற்கையாகவே அழகாக இருப்பார்கள்.. இங்கே என்ன இருக்குன்னு தெரியல நாம் பார்க்கும் என்பது சதவிகித பெண்கள் அழகாகவே இருக்கிறார்கள்.. இங்கே இருந்து சென்ற சில பிரபலங்கள்..

சில்பா ஷெட்டி
ஐஸ்வர்யா ராய்..
தீபிகா படுகோனே..
குட்டி ராதிகா..
ஸ்னேஹா உள்ளல்..

இந்த லிஸ்ட் இன்னும் நீளும் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால்...

இது போதாதா எனக்கு பிடிச்ச நகரங்களில் மங்களூர் இடம் பெற??