Sunday, September 6, 2009

ஓணம் பண்டிகையில் சபரி மலை யாத்திரை... பாகம் 2

part 1

குளிர் காற்று.. பயண களைப்பு.. அதிகாலை முழிப்பு.. அமைதியான சூழல்..உள்ளே போன உணவு..இதெல்லாம் சேர்ந்தால் என்ன வரும்??

ஆம்..தூக்கம் வரும்...


தூங்குவதிலேயே மிக நல்ல தூக்கம்.. எப்போது தூங்கினோம் என தெரியாமல் தூங்குவது.. அப்படி தூங்கினோம் கிட்டத்தட்ட அனைவரும்..

திடீரென சில மழைத்துளிகள் சிதறியது முகத்தில்.. எழுந்தவனுக்கு கண்களை நம்ப முடியவில்லை..

இத்தனை அழகையும் ரசிப்பதை விட்டு விட்டு என்ன டா தூக்கம் என சாஸ்தா கேட்பது போல் இருந்தது..

நேரே எருமேலியில் நிறுத்தினோம்.. அங்கே தர்ம சாஸ்தாவை வழிபட..

பேட்டை துள்ளினோம் ... முகத்தில் வண்ணம்.. கையில் சரம்குத்தி.. செண்ட மேளம்...
என்ன ஒரு உற்சாகம்?

அங்கே இருந்து நேராக அய்யனின் தோழராம் வாவர் சன்னதிக்கு சென்றோம்.. மத நல்லிணக்கத்தை அங்கே பார்க்கலாம்..

அங்கே இருந்து மீண்டும் பயணம்... இப்போது மலைப் பாதை வழியாக எங்கள் பேருந்து சென்றுகொண்டு இருந்தது...

பள்ளத்தாக்கு ... அங்கங்கே தெரியும் பம்பை.. சின்ன சின்ன அருவிகள்... அமைதி.. ஆனந்தம்..

பம்பை வந்தது... குளிக்க இறங்கினோம்...இந்த முறை படித்துறை வழியாக அல்லாமல் நேராக திரிவேணி நோக்கி சென்றோம்..என்ன அற்புதமான குளியல்.. சென்னையில் குளிக்கும் குளியலை நினைத்தேன்.. சிரித்தேன்..

அருமையான அரை மணிநேர குளியலை முடித்துக்கொண்டு புறப்பட்டோம் மலையேற...

நீலிமலை ஏற்றம் நோக்கி நடந்தோம்..

அப்போது தூர ஆரம்பித்தது மழை...

பயணம் தொடரும்...

Saturday, September 5, 2009

ஓணம் பண்டிகையில் சபரி மலை யாத்திரை... பாகம் 1

வருடா வருடம் சபரிமலை செல்வது கடந்த மூன்று வருடமாக அந்த ஐயப்பன் புண்ணியத்தில் நடக்கிறது..

இந்த வருடமும் சபரிமலை சென்றோம்.. எங்கள் குழு ஓணம் பண்டிகை நடைதிறப்பு நாட்களில் தான் செல்வது வழக்கம்..

காரணம்.. கூட்டம் கம்மியாய் இருக்கும்.. தரிசனம் நீண்ட நேரம் கிடைக்கும்...

எங்களுடைய குழுவுக்கு குருசாமி ஜம்பு சாமி.. ரொம்ப நல்ல நல்லவர்.. (பின்ன எங்கள எல்லாம் மேச்சுகிட்டு வலிக்காத மாதிரியே அவரும் வந்தாரே..)

சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவில் தான் எங்கள் புறப்படு தலம்...

இந்த முறை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இல் பயணம் செய்து எர்ணாகுளத்தை அடைந்தோம்.. அப்போது மணி மூன்று..

நினைச்சு பாருங்க தூறும் மழை.. நடுங்கும் குளிர்.. இருட்டு... உடனே அங்கே ஏற்கனவே ஏற்பாடு செய்து இருந்த ஒரு பஸ் மற்றும் ஒரு வேன் தயாராய் இருந்தது.. ஏறினோம்..

சிறிது நேரம் கண் அயர்ந்த பிறகு பஸ் நிறுத்தியது சொட்டாணிகரையில் அங்கே உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் காலைக் கடமைகளை முடித்துக் கொண்டு சோட்டணிகரை பகவதியை தரிசிக்க சென்றோம்..

ஓணம் நேரமானதால் கொஞ்சம் கூட்டமும் இருந்தது.. நடை இன்னும் திறக்கவில்லை..நாமும் காத்துக்கொண்டு இருந்தோம் பகவதியை பார்க்க..

நடை திறந்து அம்மன் தரிசனம் கிடைத்தது.. மனம், கண்கள் நிறைந்தன... பிரகாரம் சுற்றும் போது தான் அங்கே நிறைய மனநிலை குன்றியவர்களை கோவிலில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள் என்பதை ஞாபகப் படுத்திக் கொண்டேன்..

ஒரு பெண் பதினைந்து பதினாறு வயது கண்ணுக்கு லட்சணமான குழந்தை.. பிரகாரத்தை

அம்மே நாராயணி... லக்ஷ்மி நாராயணி ...

என்று சுற்றி வந்து கொண்டு இருந்தாள்.. திடீர் என்று "எடுக்கண்டே..." என்றோ என்னமோ கத்தினாள்.. அப்போது தான் அருகில் அவர் அப்பாவைப் பார்த்தேன்.. அப்பவாகத் தான் இருக்கமுடியும்.. கண்ணில் தெரிந்த இவளை சீக்கிரம் குணப்படுத்து தாயே என்ற வேண்டுதல்.. அதை உணர்த்தியது..

கொடிமரம் பக்கத்தில் விழுந்து கும்பிட்டவள் பக்கத்தில் இருந்த கண்ணாடியை பார்த்து "இவ்விட கண்ணாடி உண்டே.. ஞான் கண்டிட்டள்ளலோ.." என்று அவளை கண்ணாடியில் அவளே ரசித்தாள்.. சிரித்தாள்.. விரலில் அபிநயம் பிடித்தாள்.. அப்போது நானும் இவளை சீக்கிரம் குணப்படுத்து தாயே என்று வேண்டினேன்..

image courtesy: www.exoticindiaart.com

பின்னர் அங்கே இருந்து கிளம்பி நேராக வைக்கம் வந்து சேர்ந்தோம்.. அருமையான கோவில் ..
மிகப் பிரம்மாண்டமாய் கேரள முறைப்படியான கோவில்.. அங்கேயும் அருமையான தரிசனம்..


image courtesy: http://cs.nyu.edu/

கண்ணையும்
மனதையும் நிரப்பினால் போதுமா ? வயிறையும் நிரப்ப வேண்டாமா ? அங்கே இருந்த ஒரே ஹோடேலில் வயிறை நிரப்பிக் கொண்டோம்.. அங்கே நான் அனுபவித்தது தான் என் நண்பன் அடிக்கடி சொல்வது புரிந்தது...

Keralites in Other part of World...
"They work very hard"

Keralites in Kerala...
"They work hardly"

அப்படித் தான் இருந்தது கவனிப்பு..

மறுபடியும் வண்டி ஏறினோம்... இப்பொது வண்டி பம்பையை நோக்கி போய்க்கொண்டு இருந்தது...

அந்த வழியில் கண்டவை மெய் என்ன பொய்யைக் கூட சிலிர்க்க வைக்கும்... பச்சை நிறத்தை குத்தகை எடுத்தது போல எங்கும் பச்சை..

அப்போது தான் பொழிந்த மழையில் எல்லா இலைகளிலும் பச்சை.. பச்சை எங்கும் பச்சை.. தவழும் மேகம் ஹாய் சொன்னது...

வழியெங்கும் ரப்பர் மரங்கள்... சில சில ஓடைகள்.. சில்லென்று காற்று.. வித விதமான பறவைகள் சத்தம்.. இது தான் கடவுளின் தேசம் என நினைக்க வைத்தது..

பயணம் தொடரும்....