Sunday, September 6, 2009

ஓணம் பண்டிகையில் சபரி மலை யாத்திரை... பாகம் 2

part 1

குளிர் காற்று.. பயண களைப்பு.. அதிகாலை முழிப்பு.. அமைதியான சூழல்..உள்ளே போன உணவு..இதெல்லாம் சேர்ந்தால் என்ன வரும்??

ஆம்..தூக்கம் வரும்...


தூங்குவதிலேயே மிக நல்ல தூக்கம்.. எப்போது தூங்கினோம் என தெரியாமல் தூங்குவது.. அப்படி தூங்கினோம் கிட்டத்தட்ட அனைவரும்..

திடீரென சில மழைத்துளிகள் சிதறியது முகத்தில்.. எழுந்தவனுக்கு கண்களை நம்ப முடியவில்லை..

இத்தனை அழகையும் ரசிப்பதை விட்டு விட்டு என்ன டா தூக்கம் என சாஸ்தா கேட்பது போல் இருந்தது..

நேரே எருமேலியில் நிறுத்தினோம்.. அங்கே தர்ம சாஸ்தாவை வழிபட..

பேட்டை துள்ளினோம் ... முகத்தில் வண்ணம்.. கையில் சரம்குத்தி.. செண்ட மேளம்...
என்ன ஒரு உற்சாகம்?

அங்கே இருந்து நேராக அய்யனின் தோழராம் வாவர் சன்னதிக்கு சென்றோம்.. மத நல்லிணக்கத்தை அங்கே பார்க்கலாம்..

அங்கே இருந்து மீண்டும் பயணம்... இப்போது மலைப் பாதை வழியாக எங்கள் பேருந்து சென்றுகொண்டு இருந்தது...

பள்ளத்தாக்கு ... அங்கங்கே தெரியும் பம்பை.. சின்ன சின்ன அருவிகள்... அமைதி.. ஆனந்தம்..

பம்பை வந்தது... குளிக்க இறங்கினோம்...இந்த முறை படித்துறை வழியாக அல்லாமல் நேராக திரிவேணி நோக்கி சென்றோம்..என்ன அற்புதமான குளியல்.. சென்னையில் குளிக்கும் குளியலை நினைத்தேன்.. சிரித்தேன்..

அருமையான அரை மணிநேர குளியலை முடித்துக்கொண்டு புறப்பட்டோம் மலையேற...

நீலிமலை ஏற்றம் நோக்கி நடந்தோம்..

அப்போது தூர ஆரம்பித்தது மழை...

பயணம் தொடரும்...

No comments:

Post a Comment