Tuesday, September 28, 2010

ஒரு சுகமான காதல்.. உண்மை சம்பவம்

ஹைதராபாத் .. சார்மினார் எக்ஸ்பிரஸ் .. அடுத்த ஸ்டேஷன் செகுந்தராபாத் வந்து சேர்ந்தது..

அப்போது ஒரு வயதான தாத்தா பாட்டி என்னுடைய கோச்சில் ஏறினர்..

தாத்தாவுக்கு வயது 73, பாட்டிக்கு 65..

(இவை பின்பு பாட்டியிடம் கேட்டுக்கொண்டு அறிந்தது)

பாட்டி மட்டும் ஊருக்கு கிளம்புகிறார் மகன் வீட்டுக்கு சென்னையில்..

தாத்தா வழியனுப்ப வந்தவர்..

அவங்களுக்கு உள்ளே என்ன ஒரு அன்பு தெரியுமா? இந்த வயசுலயும் தன்னோட பொண்டாட்டி பத்திரமா ஊருக்கு போயி சேரணும்னு ஒரு அன்பு தெரிஞ்சது இந்த பெரியவர் கிட்ட..

பக்கத்துல என்னோட சீட் அப்படின்னு தெரிஞ்சு எனக்கு அவரோட டிரைவர் நம்பர் குடுத்தார்.. அதுவும் எப்படி வண்டி கிளம்பிடுச்சு.. ஆனாலும் இந்த தள்ளாத வயசுலயும் டிரைன் ஜன்னல் கம்பி புடிச்சிகிட்டு சொல்லிட்டே வந்தார்...

எனக்கு உடனே என்னோட பொண்டாட்டி ஞாபகம்..

காதல் என்றும் இருக்கும்..

Sunday, July 4, 2010

இது ஒரு கண்டக்டர் இன் கதை... மனதை உருக்கும் விடுகதை...

ஒரு கண்டக்டர் மிக திமிர் பிடித்தவர்... பயணிகளை மதிக்காமல் இருப்பான்... சில நேரங்களில் நிறுத்தக்கூடிய ஸ்டாப் களில் நிறுத்தாமல் செல்ல விசில் கொடுப்பவன்.. ஒரு மோசமான கண்டக்டருக்கு மிகச் சிறந்த உதாரணம்...

அந்த விதியின் வசம் இருந்த நாளில்.. கோகிலா பதினெட்டு வயது முடிந்து இரண்டு மாதம் ஆனா நிலையில் கல்லூரி செல்ல வரும் போது இந்த கண்டக்டர் இருக்கும் பஸ்ஸை நிறுத்தாமல் போக.. எப்படியும் ஏறிடலாம் என கோகிலா நினைக்க.. தவறி விழுந்ததில் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு செத்துப் போனாள்..

கண்டக்டரை போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போனாங்க.. அங்க இருந்து கோர்ட்...
ஜட்ஜ் தீர விசாரிச்சு இவனுக்கு மரண தண்டனை , ஆனா தூக்கு இல்ல .. எலெக்ட்ரிக் சேர் அப்படின்னு தீர்ப்பு எழுதிட்டார்..

ஒரு கேட்ட நாளில் அவர அந்த தண்டனை தரத்துக்காக அழைச்சிட்டு வந்தாங்க...

அந்த ரூமில அந்த சேர் அப்பறம் ஒரு ஓரத்தில் ஒரு மாங்காய் அவ்ளோ தான் High Voltage Current குடுத்தாங்க.. அப்படியும் ஒன்னும் ஆகல...

தப்பிச்சுட்டான் ... ஜட்ஜ் இவன ரிலீஸ் பண்ணிட்டார்...

திரும்பவும் வேலைக்கு வந்து சேர்ந்தான்.. அதே திமிர்.. அதே அலச்சியம்.. இப்போ தான் ஒரு மிக மிக மோசமான கண்டக்டர் என நிரூபித்தான்..

இப்போது ஒரு மத்திய வயதுடைய பெண்மணி.. ஸ்டாப்ல பஸ்ஸை நிறுத்த சொல்ல.. இந்த கண்டக்டர் விசில் தரல.. படியில் நின்று கொண்டு இருந்த பெண் இவன பார்த்து நல்லா இருப்பன்னு சொல்லிட்டே கீழ விழுந்து செத்துட்டாங்க..

திரும்பவும் கோர்ட் .. அதே ஜட்ஜ்.. இந்த தடவ இவன சும்மா விடக்கூடாது.. அப்படின்னு சாகுற வரைக்கும் எலெக்ட்ரிக் சேர் அப்படின்னு தண்டன தந்துட்டார்..

அந்த எலெக்ட்ரிக் சேர் இருக்குற ரூம்ல இப்போ மாதுளம் பழம் ஓரத்துல இருக்கு..

இந்த முறை அரை மணி நேரம் கரண்ட் குடுத்தும் அவனுக்கு ஒண்ணும் ஆகல..

மறுபடி விடுதலை பண்ணிட்டாங்க..

இப்போ நம்ம கண்டக்டர் திருந்திட்டான்.. அமைதியா அடக்கமா.. நேர்மையா ரொம்ப நல்ல கண்டக்டர் ஆயிட்டான்...

ஆனா இவன் விதி.. சொல்ல சொல்ல கேக்காம படியில Travel செஞ்ச ஒருத்தன் கீழ விழுந்து சாக, பழி நம்ம ஆள் மேல...

அதே கோர்ட்....
அதே ஜட்ஜ்..
இந்த முறை ஜட்ஜ் நல்லா கேள்வி பட்டு இருந்தார்.. இவன் மீது தப்பு இல்லை என்று.. ஆனால் செத்தது ஒரு ஆளும் கட்சி ஆளு.. தீர்ப்பு தர வேண்டிய கட்டாயம்.. இவனுக்கு தான் எலெக்ட்ரிக் சேர் ஒண்ணுமே ஆகுறதில்லையே.. அதனால...

அதே சேர்...
அதே எலெக்ட்ரிக் ...
ஆனா இந்த முறை ஓரத்துல எலுமிச்சம் பழம் இருந்தது...

இந்தமுறை அதிசயம்.. கரண்ட் பாஸ் பண்ண கொஞ்ச நேரத்துல செத்துட்டான்...

ஏன்???



யோசிங்க மக்களே...



இன்னும் தெரியல????
















கரண்ட் பாஸ் ஆகதப்போ அவர் ஒரு கெட்ட கண்டக்டர்.. means Bad Conductor...

CURRENT பாஸ் ஆனபோ அவர் ஒரு நல்லா கண்டக்டர்.. means good conductor....


no no no. no bad words.....

shared based on an email..

Friday, July 2, 2010

ஒரு மழைப் பொழுதும் மலையாள பெண்ணும்..



லைலா.. எனக்கு பிடித்த நடிகையின் பெயர் ஆனதாலோ என்னவோ அந்தப் பெயரை கொண்ட புயல் நேரத்தில் சிக்கிக்கொண்டேன்..


படம் நன்றி : விகடன்

பயணங்கள்..

வாழ்க்கை ஒரு பயணம் என்பது எல்லாரும் சொல்வது.. நான் பார்க்கும் வேலையோ பயணம் வாழ்க்கை ஆவது.. எத்தனை மனிதர்கள்.. எத்தனை முகங்கள்.. எத்தனை மொழிகள்...

விஜயவாடா.. எனக்காக லைலா வந்த இடம்.. லைலா வந்ததால் என்னுடைய பிளான் எல்லாம் மாற்றிக்கொண்டு சென்னை புறப்பட மதியம் தேடிய வேளை கிடைத்த ஒரே ரயில்.. ஹவுரா மெயில் .. மழையால் பயணிக்கும் திசையை மாற்றினார்கள்.. அங்கே ஆரம்பித்தது... சுத்திகிட்டு போகும் என்று சொன்னார்களே தவிர எதை சுத்திகிட்டு போகும் என்று சொல்லவே இல்லை..

ஒவ்வரு சிறிய ஸ்டேஷன் வந்தாலும் இரண்டு மணிநேரம் அங்கேயே ஹால்ட் அடித்து,, ரயில் போக்குவரத்தை இயக்கிக் கொண்டு இருந்தார்கள்.. பாவம்.... சிங்கள் ட்ராக் வழி.. அவர்களும் என்ன பண்ணுவார்கள்..

ஆக ஏழு மணிநேர பயணம் ஆனது முப்பத்தி ஓரு மணிநேரமாக..

இந்த மாதிரி ரயில் பயணங்கள் உங்களுக்கு கற்றுத்தருவது ஒன்றே ஒன்று.. எது வந்தாலும் ஏற்றுக்கொள்.. அனுபவி.. இதுதான்..

இந்த பயணங்களில் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்.. அதுவும் எதிரே ஒரு பெண் என்றால் ? நல்லா சுவாரஸ்யமா தான் இருக்கும்..

அவர் ஒரு மருத்துவர்.. மருத்துவ மேல் படிப்புக்காக திப்ருகர் சென்று திரும்பிக்கொண்டு இருந்தனர் அவர்களும் அவர் அப்பாவும்.. எனக்கு மருத்துவத்தில் கொஞ்சம் ஈடுபாடு இருந்ததனாலும் பல சந்தேகங்கள் இருந்ததனாலும் நிறைய பேசினோம்...

எனக்கு பிடித்த கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதாலும் அவர்கள் ஊரைப் பற்றி பேசிக்கொண்டும் வந்தேன்.. எப்போதுமே கேரளா என்றல் தனி அழகு தான்.. என்னை கவர்ந்த ஒரு இடம்.. அவர் ஓர் பற்றி.. அவர் வீட்டைப்பற்றி.. அவர் ரோஜா செடியை பற்றி.. நிறைய பேசினோம்...

எனக்கு தெரிந்த அக்கு பிரஷர் முறைகளை பற்றி பேசினோம்.. அவர் எடுக்கவுள்ள காத்து மூக்கு தொண்டை சர்ஜன் படிப்பே தேவை இல்லை என்று இந்த மருத்துவத்தில் சொல்லி உள்ளதை சொன்னேன்... நிறைய ஆச்சரியம்.. ஆனாலும் விட்டுக் கொடுக்கவில்லை.. அந்த மருத்துவமுறை மற்றும் அது தொடர்பான ஒரு புத்தகத்தையும் அவருக்கு பரிசாக கொடுத்தேன்.. அதில் என் மொபைல் எண்ணை எழுதிக் கொடுத்தேன்..

இடையே என்னுடைய திருமண விசயத்தை பற்றி சொல்லி இருந்தேன்... மறக்காமல் அழைப்பு ஈ மெயில் அனுப்ப சொல்லி இருந்தார்கள்...... நானும் பயணத்தின் பிறகு மறக்காமல் மறந்துவிட்டேன்... ஆனாலும் திருமணத்திற்கு ஒரு வாரம் கழித்து போன் செய்து வாழ்த்துக்கள் கூறினார்கள்.....

இந்த பயணம் சுவாரஸ்யமாகவும் சந்தோசமாகவும் ஒரு புதிய நட்பை அறிமுகப் படுத்திய திருப்தியாகவும் இருந்தது...

Tuesday, June 1, 2010

ஓர் இரவு......... உங்களுடன்.....

அந்த பக்கம் பார்க்காதே...

மனசு சொல்லியது....


இருந்தாலும் கண்கள் திரும்புவதற்கே பார்த்தது.... அதை பார்க்க..

ரயில் சத்தம் தூரத்தில் கேட்டது... ரயில் நிலையதிருக்கு இன்னும் ஒரு கிலோமீட்டர் இருக்கும் என நினைத்தேன்...

இருக்கிற டென்ஷன் வியர்வை கூட வரவில்லை.. என்ன வினோதம்?

ரயில் வந்தாலும் ரயிலில் ஏறப்போகிறேனா ? கேள்வி கேட்டுக்கொண்டேன்..

எங்க போகிறோம் என தெரியாமல் போகப்போகிறோம எனவும் தெரியாமல் ஒன்பது முப்பதுக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் பிடிக்கும் பயணியை போல வேகமாக நடந்தேன்... தயவு செஞ்சு என்னோட நடந்து வர்ரிங்களா??

கொஞ்சம் இருங்க... யாரோ வர்றாங்க.. இப்போ எனக்கு நீங்க என்கூட வர்றது கொஞ்சம் தைரியத்த குடுக்குது...

ஷ்ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் .........

யாரோ பேசிட்டு போறாங்க.. ஹ்ம்ம் இப்போ வாங்க.. இப்போ எங்க போறேன்னு தெரியாது ஆனா எங்க இருந்து வர்றேன்னு தெரியுமா? ஒரு கொலையா பார்த்துட்டு...

எனக்கும் என்னோட பக்கத்துக்கு வீடு மணிக்கும் கொஞ்ச நாளா பிரச்சனை... அன்னைக்கு தெரியாதனமா சண்டையில இருந்த அருவாளால அவன் ஒரு கைய வெட்டிட்டேன்.. என்ன இப்போ அவன் சாப்பிடுற கையால கழுவுறான்.. ஆனா என் மேல அவனுக்கு கொல வெறி..

இதோ இப்போ என்னை கொல்ல ஆளோட வந்தான்.. நான் ஓட ஆரம்பிச்சேன்...

ரெண்டு பேர்.. வெளியூருன்னு நினைக்கிறேன்.. நல்ல வாட்ட சாட்டமா தயார் பண்ணி இருந்தாங்க..

ஓட ஆரம்பிச்சேன்.. இங்க வந்து சிக்கிகிட்டேன்.. இது ஒரு abandoned Factory.. கிட்ட தட்ட சரோஜா படத்துல வருமே அந்த எடம் மாதிரி

கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஓடி இருக்கேன்... இருட்டு வேற.. என்னோட கால் ஒரு இரும்பு கம்பி தடுக்கி சத்தம் வந்தது... அதை பார்த்துட்டங்க..

வந்துட்டாங்க.. என்னை கிட்ட நெருங்கிட்டங்க.. அப்போ மறுபடியும் ஓட நினச்சு அப்படியே குப்புற விழுந்து மயங்கிட்டேன்.. கண் எல்லாம் இருட்டிடுச்சு கொஞ்ச நேரம் .. ஒரு வழியா இவங்க கிட்ட இருந்து தப்பிக்கணும்னு நெனச்சு எந்திரிச்சு பார்த்தா பக்கத்துல இன்னொரு பொணம்..

திக்குன்னு இருந்தது.. அவங்களுக்கு உள்ளே வெட்டிகிட்டு குத்திகிட்டான்களா? ஒரு எழவும் தெரியல.. அங்க குழப்பமா நின்னு பேசிக்கிட்டு இருக்கும்போது நைசா நழுவி வந்துட்டேன்.. அப்போ பிடிச்ச ஓட்டம்...

நல்லவேள நீங்களாவது துணைக்கு கிடைசிங்க... இருங்க.. நாம பேசாம போயி பாப்போமா??? யார கொன்னு இருக்காங்கன்னு??

அட வாங்க சார்..

இதோ இந்த இடது பக்கம் தான் அது நடந்தது.. அட அங்க பாருங்க.. யாருமே இல்ல... அந்த பிணமும் என்ன மாதிரியே வெள்ளை சட்டை போட்டு இருக்கு.. பாவம் யாரு பெத்த பிள்ளையோ???

சரி அந்த பொணத்த பொரட்டி போடுங்க... என்னால முடியல...

தேங்க்ஸ்...

ஆஆ... அது நானே தானா??? ஐயோ என்னோட தலையில அது என்ன?? இரும்பு கம்பி குத்தி இருக்கே??

"செத்தது நான் தானா???????????"

குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...

மணியை பார்த்தான் இரவு இரண்டு மணி..

ஹைதராபாத் பனிகால குளிர் இரவில் குளிர் இன்னும் அதிகமானதை உணர்ந்து இருந்தான்.. ஆனாலும் வியர்வை பூத்து இருந்தது..

நடையின் வேகத்தை கூறினான்.. தூரத்தில் ஒரு நாய் குலைத்தது..

அது ஒரு செயின் ரியாக்சன் போல அவன் அருகில் இருந்த நாயை குலைக்க வைத்தது..

காறி எச்சிலை துப்பினான் .. எச்சில் துப்பினால் நாய் பின் தொடராது என்று யாரோ சொல்லி கேட்டு இருந்தான்...

கையில் மட்டும் அது பத்திரமாக.. ச்சே போட்டோகிராபர் தொழிலுக்கு ஏன் தான் வந்தோமோ? நொந்து கொண்டேன்

விடிந்ததும் என்னை தேடுவர்களா? கண்டு பிடித்தால் உயிருடன் விடுவார்களா? நினைக்கும் போது சில்லிட்டது...

உங்களுக்கு தெரிந்திரிக்கும் ஏன் கையில் உள்ளது ஒரு கேமரா..

இரண்டு மணி நேரம் முன்னால்...

இரவுக் காட்சி முடித்து விட்டு வந்து கொண்டு இருந்தவன் ஒரு சத்தத்தை கேட்டு நிமிர்ந்தான்..

அகால வேளையில் ஒரு அனத்தும் சத்தம்..

உடலுறவு கொள்கிறார்களா? விவகாரமான சிந்தனை முளைத்தது..

ஒரே ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்தது.. எட்டி பார்கலாமா? என்னுடைய பகுதி நேர பத்திரிகையாளன் மூளை வேலை செய்தது..

சாக்கடை எங்காவது திறந்திருக்கும், போலீஸ் காரன் யாரவது லஞ்சம் வாங்குவான் என எந்த நேரத்திலும் எதாவது படம் பிடிக்கலாம் செய்தி ஆக்கலாம் என்று எப்போதும் என் உடன் இருக்கும் ஒரு சின்ன கேமரா எனக்குள் கனத்தது...

எட்டி பார்த்தேன்.. இப்போது தனியாக உள்ள வீட்டில் விளக்கெரியும் அறை நோக்கி சென்றேன்.. வேலிச் சுவர் மேல் நின்றேன் ..

"வாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழியே காற்று வரத்தான் செய்யும்"


எங்கோ படித்த நினைவு.. சாளரத்தை பார்த்தேன்..

ஜன்னல் மேல் உள்ள மழை தடுப்பு சுவர் மேல் ஏறி நின்றேன்.. ஆம் உண்மை தான்..
வாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழியே காற்று வரத்தான் செய்யும்

நான் பார்த்தது இரண்டு ஆசாமிகள் ஒரு பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்தார்கள்..

அதை இன்னும் இருவர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்..

சிவப்பு பனியன் அணிந்த ஒருவன் அந்த பெண்ணை பார்த்து சொத்து பத்திரத்தில் கைஎழுத்து போட மாட்டே? என்றபடி கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்தான்.. பக்கத்தில் கத்தை பேப்பர் அட்டையில் கிளிப் செய்யப்பட்டு இருந்தது...

சிலிர் என்று எங்கோ இருந்து வந்த காற்று என்னை ஊடுருவியது...

உடனே கேமரா எடுத்தேன்..

கிளிக்..

கிளிக்...

நழுவியது கேமரா..

நல்லவேளை பிடித்துக் கொண்டேன்..

மறுபடி கிளிக்.. அட நழுவும் போது பிடித்ததில் பிளாஷ் ஆன் ஆகிவிட்டது...

அதில் ஒருவன் அதை பார்த்துக் கொண்டே இருந்தான்..

ஹெய்.. நில்லு.. உன்னதான்... அந்த சிவப்பு பனியன் என்னைபார்த்து கத்தினான் ...

அவன் ஓடி வர எத்தனிப்பது தெரிந்தது..

ச்சே ... இங்கேயுமா தமிழ் ரௌடிகளிடம் மாட்ட வேண்டும்?


ஏறிய வழியில் இறங்கி.. ஓட ஆரம்பித்து ,

இதோ இரண்டு மணிநேரம் ஆயிற்று..

அதோ என் அறை தெரிகிறது.. உங்களிடம் அடுத்து பேசுகிறேன்.. நான் தூங்க வேண்டும்...

சரியாக ஆறு மணி நேரம் கழித்து..

நான் சரியாக உறங்க வில்லை என சொல்ல வேண்டியது இல்லை..

இதோ உடை மாற்றி ஒரு புது வித மேக்கப் செய்து கொண்டு வெளியே வந்தேன்...

மனதுக்குள் ஜெம்ஸ் பாண்ட் படத்தில் வரும் இசை..

அந்த தெருவுக்கு போனேன்.. இப்போது நான் போனது என் நண்பனிடம் இரவல் வாங்கிய யமகாவில் ..

அதோ அந்த சிவப்பு பனியன் போடடிருன்த்தவன்.. இப்போது வெள்ளை சட்டையில்..

ஐயோ என்னைப் பார்த்து விட்டான்... அவனை தாண்டி சென்று அவனை திரும்பி பார்த்தேன்..

டேய் தரணி அவன புடி.. சொல்லியது காதில் விழுந்தது...

ஆனால் என் பின்னால் பார்த்தபடி சொல்கிறானே..

திரும்புவதற்குள் ஒரு கரம் என்னை பற்றியது.. சுதாரித்து பிரேக் போட்டேன்..

ஐயோ நான் காலி..

தரணி என்பவன் அஜானுபகுவாக இருந்தான்..

வாங்க சார் உங்க கிட்ட பேசணும்.. அவன் குரல் கர்ண கொடுரம்..

அதே வீட்டுக்குள் நான் அழைத்துச் செல்லப் பட்டேன்.. இல்லை இழுத்துச் செல்லப்பட்டேன்..

என்னை போட்டோ எடுக்க யாரவது வருவார்களா? யாரவது வாங்களேன் இப்போது பகல் நேரம்.. பிளாஷ் கூட தேவை இல்லை..

எனக்குள்ளே மனது இருந்தாலும் அது தனக்குளே பிதற்ற ஆரம்பித்தது...

உள்ளே சென்றவுடன் சாந்தமாய் ஒரு பெரியவர் குறுந்தாடியுடன்.. ஓஹோ இவர் தான் பெரிய வில்லன் போல..

என்ன தம்பி நேத்து நைட் என்னமோ போட்டோ எடுத்திங்க போல..

அவர் கேட்டவுடன் வியர்த்து..

சாரி சார்.. இதோ இந்த கேமரா தான் .. குடுக்குறேன் என்னை ஒன்னும் பண்ணிடாதிங்க..

ஹா ஹா ஹா.. எல்லோரும் ஏளனமாக சிரித்தார்கள்..

சரி போங்க... பிலிம் ரோலை உருவிக்கொண்டு காமெராவை தூக்கி போட்டார்..

தம்பி.. திரும்பி நடக்க ஆரம்பித்தவனை அவர் குரல் தடுத்தது...

போகிறப்போ வாசல்ல இருக்கு ஒரு போர்டு அத பார்த்துட்டு போங்க..

அப்போது தான் கவனித்தேன் பின்னால் அந்தப் பெண்.. நேற்று கழுத்து நெறி பட்டவள்..

அப்பா இன்னைக்கு எத்தன மணிக்கு கிளம்ப? கேட்டுக்கொண்டே வந்தாள்...

தலை சுற்றியது .. சீக்கிரம் வெளியே வந்து போர்டுஐ பார்த்தேன்..

ஹைதராபாத் தமிழ் சங்கம்..
தமிழ் மணி நாடகக் குழு..
ஹைதராபாத் - 25

Hyderabad Tamil Sangam
Thamilmani Drama Troop
Hyderabad - 25

தலை சுற்றியது இன்னும் வேகமாக.. உங்களுக்கும் கூடத்தானே?


------------------------------------------------------------------------------------------------

பிரபல பதிவன் ஆகும் முயற்சியில் ஒரு மீள்பதிவு ... ஹி ஹி ஹி ....

Change is Here..... மாற்றம் இங்கே..

வாழ்கையில் நிறைய நிறைய விஷயங்கள் நடக்கும்.. எல்லாம் ஞாபகம் இருக்குமான்னு சந்தேகம் தான் .. ஆனா சிலது உங்களுக்கு தூக்கத்தில் கூட மறக்காது..

சின்ன வயசில் நினைவு தெரிந்தவுடன் படித்த பள்ளி.. அந்த மிஸ்கள்.. LKG படித்தபோ படுத்த மதிய தூக்கம், அம்மா ஸ்கூலில் விட்டுட்டு போனபோது அழுதது.. சமாதனம் செய்து உள்ளே அனுப்பிய சகிலா மிஸ்.. அப்பப்போ மாறின வீடுகள்.. எட்டாவது படிக்கையில் சைட் அடித்தது... என ஒரு பெரிய லிஸ்ட்..

திடீர்னு ஒரு நாள் எனக்கு வயசான மாதிரி ஒரு பீல்.. இப்போ தான் பிறந்து வந்த மாதிரி இன்னொரு பீல்..

வீட்டுல பரபரப்பா என்னென்னமோ செய்து கொண்டு இருந்தாங்க.. என்னக்கு குழப்பம் ....

என்னோட வயச கணக்கு போட்டு பார்த்தேன்.. ஆச்சு 28 ..

நிஜம்மா நான் பிறந்ததுல இருந்து Bachelor ஆகவே இருந்தேன்.. ஏன் படித்தது கூட Bachelor of Technology தான் ...

இப்போது என்னோட எல்லா account களிலும் மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளி விடப்பட்டுளேன் .. Facebook, Orkut, Twitter.... இன்னும் எத்தனை எத்தனை..

ஒரு விதமாக மந்திரிச்சு விடப்பட்ட கோழியாக சுத்திகிட்டு இருக்கேன்...

பாருங்க ஞாபகங்கள பேச ஆரம்பிச்சு எதையோ பேசிகிட்டு இருக்கேன்..

என்னோட வாழ்கையில ஒரு சம்பவம் நடக்க போகுது.. அதை நான் அம்னிசியாவிலும் மறக்க முடியாத சம்பவம்..

The change is here,...... My Status is going to Change from Single to Married...

என் வாழ்க்கைக்கு என்று ஒரு தங்கமணியை பார்த்து விட்டார்கள் என் பெற்றோர்கள்.... வரும் இருபதாம் தேதி single ஆக இருந்த சிங்கம் (சூர்யா படம் இல்லங்க) குடும்பஸ்தன் ஆக போகுது...

இடம் : ஸ்ரீ ரெங்க மஹால், மதுரை - 1
நாள் : 20.06.10
நேரம்: 8.30 - 10.00 AM

எல்லா பதிவுலக நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறேன்...

இப்படிக்கு,
ராம்ஜி

Sunday, February 28, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா... Mixed Reactions of me..

விண்ணைத்தாண்டி வருவாயா விமர்சனம் எல்லாம் இல்ல.. எனக்கு படம் எடுக்க தெரியாது.. அதனால நான் விமர்சனம் பண்றது சரியில்ல.. ஆனா படம் பார்க்க தெரியும்.. நான் என்ன பீல் பண்ணேன்னு எழுதலாம் அப்படின்னு நெனச்சேன்.. எழுதுறேன்..

முதல் பாதி...

சிம்பு த்ரிஷா கடலை..

சிம்பு பார்த்தவுடன் காதல்.. ஒபெநிங் சாங் இல்லை ஆனால் பெயர் போடும்போது யெங் சூப்பர் ஸ்டார் என போடப்படுகிறது..(ஐயஹோ!!!!!)

தன்னைவிட ஒரு வயசு அதிகமான பொண்ண (த்ரிஷா) பார்த்தவுடன் லவ் பண்றார் நம்மாளு (சிம்பு).. திரிசாவுக்கு அப்போ குழப்பம் வேணுமா வேண்டாமான்னு.. அப்போ ஆரம்பிக்குது கடைசிவரைக்கும் அது தொடருது...

கொஞ்ச நேரம் லவ் பண்றார் அப்பறம் நண்பர்களா இருப்போம்னு சொல்றார்.. மெல்லவும் முடியல துப்பவும் முடியல..

சிம்பு கேரளா போயி த்ரிஷாவ டாவடிக்கிறார்.. வரும்போது ட்ரைனில் சந்திக்கிறார் த்ரிஷாவ (wanted ஆ தான்) அப்பறம் முத்தங்கள் உதட்டிலும்!!!

அடுத்தநாள் தான் வந்து கேக்கிறார்.. நண்பர்கள் இப்படி தான் behave பண்ணுவாங்களா அப்படின்னு.. குழப்பமா த்ரிஷா ??

இரண்டாம் பாதி..
டைரக்டர் சிம்பு..



Asst. Director சிம்பு ... படத்தில் பணிபுரிகிறார்..

காதலில் விரிசல் (சத்தியமா தெரியல எதுக்காக த்ரிஷா வேணாம்னு சொல்றங்கன்னு.. கொஞ்ச நாள் பேசலைன்னா காதல் போயிடுமா?? என்ன பாஸ் இது????!!! என்னவா வேணும்னாலும் இருக்கட்டும் SMSஅனுப்பி காதலை கட் பண்றது ரொம்ப over ஆமா..)

அப்பறம் டைரக்டர் ஆகிறார் சிம்பு..

எஸ்....
த்ரிஷா மேல் வைத்த காதலை படமாக எடுக்கிறார்..

அவ்ளோ தான்...




படம் முழுக்க இருந்தவை.....


பேசுறாங்க... எல்லாரும் பேசுறாங்க .. Englishla பேசுறாங்க.. தமிழ்ல பேசுறாங்க.. தங்க்லீஷ் ல பேசுறாங்க....

அய்யா கெளதம்.. நீங்க ஹாலிவுட் ரேஞ்சுல தமிழ்படம் எடுக்க முயற்சிக்கிரிங்க.. ஆனா அதை நம்ம மொழியிலேயே ட்ரை பண்ணலாமே? ஏற்கனவே பசங்க எல்லாரும் இப்போ i love you சொல்றதில்ல (உங்க புண்ணியத்துல) .. எல்லாரும் i am in love with you தான் சொல்றாங்க.. அந்த cameraman கேரக்டர் நல்ல பண்ணி இருந்தாரு.. ஆனா அவருக்கு இங்கிலீஷ் பேசுறதுக்கு கஷ்டமா இருக்கு .. ஏங்க அவர கஷ்டப்படுத்துறீங்க? அவருக்கும்மா வைக்கணும்?

மத்தபடி படம் பாக்குறதுக்கு குளிர்ச்சியா இருந்தது.. நல்ல இசை.. (இசை புயல் இல்ல இசை தென்றல்)..

மத்தபடி எனக்கு உங்களால suspense வைக்க முடியல.. I guessed it already.. so better luck next time..

ஏற்கனவே வடிவேலு இந்த படத்தின் கதையை சொல்லிவிட்டார் .. எப்படின்னு கேக்குறிங்கள??...
!!!!!த்ரிஷா இல்லன்ன திவ்யா...!!!!!!!!




விண்ணைத்தாண்டி வருவாயா.. 'A' center தாண்டி வராதுன்னு நினைக்கிறேன் .. ஆல் தி பெஸ்ட் ...

Wednesday, February 24, 2010

பயணங்கள் முடிவதில்லை... மங்களூர்..

எனக்கு வேலை சுத்துறது ...

இந்தியாவுல கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களுக்கும் போயாச்சு.. வடகிழக்கு மாநிலத்துக்கு தான் இன்னும் எனக்கு சான்ஸ் கிடைக்கல...

எல்லா ஊர்களுக்கும் போறப்போ ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும்... பஸ், ரயில், பிளேன் என மாறி மாறி போனாலும் ரொம்ப பிடித்தது ரயில் பயணம் தான்... சுகமான தாலாட்டு.. காலாற நடை.. அவசரத்துக்கு போறதுக்கு பிரச்னை இல்ல..

அதைப்போல ஒரு பயணம் தான் சென்னை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிடைச்சுது..

சென்னைல இருந்து சாயங்காலம் அஞ்சு மணிக்கு கிளம்பி மறுநாள் காலைல ஒன்பது மணிக்கு கொண்டு போய் சேர்ப்பான்..

ஆனா அந்த எழு மணியில இருந்து ஒன்ம்பது மணிவரைக்கும் கேரளா கரை ஓரமா வண்டி போகும் பாருங்க.. சுகம்...

தென்னை மரம்..
அப்பப்போ கடக்குற ஆறுகள்..
ஆற்றோரமா இருக்கிற வீடுகள்..
அவங்களுக்குன்னு இருக்குற கட்டுமரம்...
சில்லுன்னு காத்து...
ரொம்ப இடம் வளைச்சு கட்டி இருக்கிற வீடுகள்..
கேரளா பெண்குட்டிகள்...
எல்லாமே அழகா இருக்கும்..

அதெல்லாம் தாண்டி...

மங்களூர்...

கேரளா கர்நாடக எல்லைல இருக்கிற முக்கியமான கர்நாடக நகரம்..

இங்கே காற்றும் இருக்கும் வெயிலும் இருக்கும்... மலைமேல் இருக்கிற நகரம்.. மீன்பிடி துறைமுகம் இருக்கு... மலையும் கடலும் இணையும் இடம்.. கிட்டத்தட்ட சென்னை மாதிரி வெயில் சுடும்.. அப்பப்போ மழையும் பெய்யும்..

இங்கே சிறப்பு ..

நிறைய நல்ல நல்ல இடங்கள் இந்த நகரத்தை சுற்றி உள்ளன..

கொல்லூர்..
குதிரமுக்...
உடுப்பி..
மல்பே..

இன்னும் நிறைய இடங்கள்... எனக்கு தெரிஞ்சத சொல்றேன் அவ்வளவு தான்.. அப்பறம் இங்கே இருந்து கோவா போறதுக்கு ரயில் பயணம் மிக மிக அருமையானது... கொண்கன் ரயில்வேஸ் இயக்குகிறது.. இது ஒரு அழகான ரயில் பாதை ஆகும்..

மங்களூர்இல் இருக்கும் பெண்கள் இயற்கையாகவே அழகாக இருப்பார்கள்.. இங்கே என்ன இருக்குன்னு தெரியல நாம் பார்க்கும் என்பது சதவிகித பெண்கள் அழகாகவே இருக்கிறார்கள்.. இங்கே இருந்து சென்ற சில பிரபலங்கள்..

சில்பா ஷெட்டி
ஐஸ்வர்யா ராய்..
தீபிகா படுகோனே..
குட்டி ராதிகா..
ஸ்னேஹா உள்ளல்..

இந்த லிஸ்ட் இன்னும் நீளும் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால்...

இது போதாதா எனக்கு பிடிச்ச நகரங்களில் மங்களூர் இடம் பெற??