Thursday, July 30, 2009

அர்த்தம் புரியவில்லை.. அனுபவம் பழையதில்லை.. கவுஜ

கிட்டப்பார்வையில்
கிறங்கும் ஆவியில்
வட்டப்பாறையில்
வருடும் காற்றினில்
நெட்டு நீள் வளர்
செவ்விளநீர் தளர்
ஓட்டும் ஈரமாய்
உயிரின் ஓரமாய்
சொட்டும் நீரினில்
சொருகும் காதலில்
வெட்டும் வேல்விழி
வெட்கப் போர் கழி
தட்டும் தரையோடு
தழுவும் கரத்தோடு
பார்வை பதறியதே
பற்கள் இறுகியதே
நாவும் நடனத்துடன்
நீட்டி முழக்கிடவா
என்றே கேட்கிறதே


என்ன இவையெல்லாம்
எனக்கே தெரியவில்லை
அர்த்தம் புரியவில்லை
அனுபவம் பழையதில்லை
காதலை சொல்ல வந்தால்
கவிதை வந்திடுமோ?
அர்த்தம் ஒன்றுமின்றி
வந்தால் குறைந்திடுமோ?
காதலை ஏற்றிடு வா..
அதையும் கற்று மறப்போம்..

முதல் பாதி கவுஜ 'பிரபல' பதிவர் ஆகும் முயற்சியில் எழுதியது.. எனக்கே புரியவில்லை.. நிஜமாக..
இரண்டாம் பாதி முதல் பாதியை justify செய்வதாக எழுதி உள்ளேன்..

Tuesday, July 21, 2009

திகில் கதையில் ஒரு விடுகதை...

நிஜன்யன்...

பிரபல எழுத்தாளர்.. திகில், மர்மங்கள், ஆவி, அமானுஷ்யம் இவை இவரின் கதைக் களம்..

இவரின் கதை எழுதும் பாணியே வித்யாசமானது தான்...

வீடு? தத்தனேரி சுடுகாடு தெரியுமா? அதில் எரியும் பிணங்களை இவர் வீட்டில் இருந்து பார்க்கலாம்...

தினமும் இரவு பன்னிரண்டு மணிக்கு தான் கதை எழுத ஆரம்பிப்பார்..

ஒரு செம்பு பால் , ஒரு டைரி , அந்த டைரியில் ஒரு சிவப்பு மை பேனா.. இது தான் அவர் கதைக் கருவிகள்..

எகிப்திய நாகரிகம் மற்றும் மம்மிக்களை நம்பும் ஆசாமி.. அதனாலேயோ என்னமோ ஒரு பூனை வளர்க்கிறார்.. அதுவும் சாதாரண பூனை போல் அல்லாமல் ஒரு சின்ன பொமேரியன் நாய் குட்டி போல இருக்கும்..

அன்று அதே போல் கதை எழுத உட்கார்ந்தார்..

காலண்டர் அம்மாவாசை என அந்த நாளை சொன்னது....

எதோ ஒரு விதமான இறுக்கம் அவரை சூழ்ந்து இருப்பதை உணர்ந்தார்..

என்றும் இல்லாத இறுக்கம்.. இன்றைக்கு??

மணி பதினொன்று ஐம்பத்தி ஐந்து..

பால் செம்புடன் டைரி மற்றும் பேனாவை மேஜையில் வைத்தார்..

டிங் . டிங்.. டிங்.. டிங்.. டிங்.. டிங்.. டிங் . டிங்.. டிங்.. டிங்.. டிங்.. டிங்..

பன்னிரண்டு மணி அடித்தது...

தூரத்தில் ஒரு நாயின் குரல்.. அது குலைப்பதாக தெரியவில்லை...

ஒரு வேதனை கலந்த ஒரு குரலில் அது ஊளையிட்டது..

உட்கார்ந்தார்.. எழுத ஆரம்பித்தார்.. ஒரு பக்கம்.. மிக சீக்கிரமாக முடிந்திருந்தது..

பக்கம் முழுவதும் ரத்தத்தால் எழுதியது போல சிவப்பு எழுத்துக்களால் நிரப்பி இருந்தார்...

சில்லென அப்போது ஒரு காற்று...

உடம்பை மட்டும் அல்ல... எலும்பையும் ஊடுருவும் குளிர் கொண்ட காற்று..

ஜன்னல்கள் அடித்துக்கொண்டன.. திரைச் சீலைகள் பரபரத்தன..

மெதுவாக ஒரு அழுத்தமான மனநிலையுடன் எழுந்து ஜன்னலை மூடச்சென்றார்..

டங்க்....

ஒரு பெரிய சத்தம்.. திரும்பி பார்த்தார்.. அவர் வளர்த்த பூனை மேஜைமேல் ....

பால் சொம்பு தரையில் உருண்டு கொண்டு இருந்தது ..

விகாரமாய் பார்த்து அந்த பூனை..

இரண்டு அடி எடுத்து வைத்தவுடன் தவ்வி மேலே ஏறி காணமல் போனது,,,

அங்கே டைரி மேல் பால் கொட்டிக்கிடந்தது...

அது என்னவாகி இருக்கும்?? யூகிக்க முடிகிறதா??




விடைக்கு,,,
இங்கே மௌஸ் கொண்டு ப்ளாக் செய்து பார்க்கவும்...

>>>சாதரண மில்க் டைரி மில்க் ஆகி இருக்கும்...<<<



பதிவுலகமும் அரசியலும்... ஒரு புது பதிவனின் புலம்பல்..

எல்லாருக்கும் வணக்கம் அண்ணே..

நான் கொஞ்சம் புது ஆளு.. சில நேரம் பதிவுலகத்துல என்ன நடக்குதுன்னே தெரியல.. கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பதிவ படிச்சிட்டு இருந்த ஒண்ணுமே புரியல அதுக்கு சில மறைமுக பின்னூட்டம் சில பேர் போட்டு இருந்தாங்க..

சரி இந்த கதை நமக்கு தெரியாதுன்னு கெளம்பிட்டேன்...

அப்பறம் சில பல பதிவுகள் அப்படியே பார்க்க முடிந்தது..

இதுல ஒண்ணுமே புரியலண்ணே .. புது பதிவர்ன்றான் பிரபல பதிவர்ன்றான்.. புது பதிவர் போடுற பதிவுல பிரபல பதிவர்கள் பின்னூட்டம் போடலன்றான்..

செட்டு சேர்ந்து சுத்துறான்றான்... பொண்ணுங்களுக்கு மட்டும் பின்னூட்டம் போடுறாங்கன்றான்.. தல சுத்துது சாமி..

இதுல எனக்கு சில விஷயம் புரியல..

எல்லா பிரபல பதிவர்களும் ஒரு காலத்தில் புது பதிவர்கள் தான்...

நல்லா எழுதுன யாரு வேணும்னாலும் பிரபல பதிவர் ஆகலாம்ல? அதே நேரத்துல பெருசுங்க எல்லாரும் கொஞ்சம் சிறுசுங்கள உற்சாகப் படுத்தலாம்ல?

அப்பறம் எதுக்கு இந்த சண்டை? ஆனப்பா சில பின்னூட்ட போர்களை படிக்கும் போது செம ஜாலியா இருக்கு.. ஆனா சில பேர் அதனால hurt ஆவுறாங்க.. அதையும் நாம நெனசுக்கணும்..

அதே மாதிரி அவங்க அவங்க பதிவுல அவங்க அவங்க என்ன வேணும்னாலும் எழுதிக்கலாம்.. அது கூகிள் ஆண்டவர் குடுத்த சுதந்திரம். நல்லா இருந்த பாராட்டுங்க.. நல்லா இல்லையா குறைய சுட்டி காட்டுங்க உங்க உண்மையான முகத்தோட..

அத விட்டுட்டு அனானி பின்னூட்டம் அசிங்கமா போடுறத தவிருங்க.. சரி நீங்க சுட்டிக் காட்டியும் ஒன்னும் பலனில்லையா.. விட்டுடுங்க என்னவோ எழுதிட்டு போறாங்க.. அந்த பக்கமே போகதிங்க..

அப்பறம் யாரும் என்ன தப்பா நினைக்க வேணாம்.. எதோ எழுதனும்னு தோணுனத எழுதிபுட்டேன் அவ்ளோதான்..

ஒவ்வொரு பதிவருக்கும் ஒவ்வொரு பீலிங் ...

Friday, July 17, 2009

குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...

மணியை பார்த்தான் இரவு இரண்டு மணி..

ஹைதராபாத் பனிகால குளிர் இரவில் குளிர் இன்னும் அதிகமானதை உணர்ந்து இருந்தான்.. ஆனாலும் வியர்வை பூத்து இருந்தது..

நடையின் வேகத்தை கூறினான்.. தூரத்தில் ஒரு நாய் குலைத்தது..

அது ஒரு செயின் ரியாக்சன் போல அவன் அருகில் இருந்த நாயை குலைக்க வைத்தது..

காறி எச்சிலை துப்பினான் .. எச்சில் துப்பினால் நாய் பின் தொடராது என்று யாரோ சொல்லி கேட்டு இருந்தான்...

கையில் மட்டும் அது பத்திரமாக.. ச்சே போட்டோகிராபர் தொழிலுக்கு ஏன் தான் வந்தோமோ? நொந்து கொண்டேன்

விடிந்ததும் என்னை தேடுவர்களா? கண்டு பிடித்தால் உயிருடன் விடுவார்களா? நினைக்கும் போது சில்லிட்டது...

உங்களுக்கு தெரிந்திரிக்கும் ஏன் கையில் உள்ளது ஒரு கேமரா..

இரண்டு மணி நேரம் முன்னால்...

இரவுக் காட்சி முடித்து விட்டு வந்து கொண்டு இருந்தவன் ஒரு சத்தத்தை கேட்டு நிமிர்ந்தான்..

அகால வேளையில் ஒரு அனத்தும் சத்தம்..

உடலுறவு கொள்கிறார்களா? விவகாரமான சிந்தனை முளைத்தது..

ஒரே ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்தது.. எட்டி பார்கலாமா? என்னுடைய பகுதி நேர பத்திரிகையாளன் மூளை வேலை செய்தது..

சாக்கடை எங்காவது திறந்திருக்கும், போலீஸ் காரன் யாரவது லஞ்சம் வாங்குவான் என எந்த நேரத்திலும் எதாவது படம் பிடிக்கலாம் செய்தி ஆக்கலாம் என்று எப்போதும் என் உடன் இருக்கும் ஒரு சின்ன கேமரா எனக்குள் கனத்தது...

எட்டி பார்த்தேன்.. இப்போது தனியாக உள்ள வீட்டில் விளக்கெரியும் அறை நோக்கி சென்றேன்.. வேலிச் சுவர் மேல் நின்றேன் ..

"வாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழியே காற்று வரத்தான் செய்யும்"


எங்கோ படித்த நினைவு.. சாளரத்தை பார்த்தேன்..

ஜன்னல் மேல் உள்ள மழை தடுப்பு சுவர் மேல் ஏறி நின்றேன்.. ஆம் உண்மை தான்..
வாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழியே காற்று வரத்தான் செய்யும்

நான் பார்த்தது இரண்டு ஆசாமிகள் ஒரு பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்தார்கள்..

அதை இன்னும் இருவர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்..

சிவப்பு பனியன் அணிந்த ஒருவன் அந்த பெண்ணை பார்த்து சொத்து பத்திரத்தில் கைஎழுத்து போட மாட்டே? என்றபடி கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்தான்.. பக்கத்தில் கத்தை பேப்பர் அட்டையில் கிளிப் செய்யப்பட்டு இருந்தது...

சிலிர் என்று எங்கோ இருந்து வந்த காற்று என்னை ஊடுருவியது...

உடனே கேமரா எடுத்தேன்..

கிளிக்..

கிளிக்...

நழுவியது கேமரா..

நல்லவேளை பிடித்துக் கொண்டேன்..

மறுபடி கிளிக்.. அட நழுவும் போது பிடித்ததில் பிளாஷ் ஆன் ஆகிவிட்டது...

அதில் ஒருவன் அதை பார்த்துக் கொண்டே இருந்தான்..

ஹெய்.. நில்லு.. உன்னதான்... அந்த சிவப்பு பனியன் என்னைபார்த்து கத்தினான் ...

அவன் ஓடி வர எத்தனிப்பது தெரிந்தது..

ச்சே ... இங்கேயுமா தமிழ் ரௌடிகளிடம் மாட்ட வேண்டும்?


ஏறிய வழியில் இறங்கி.. ஓட ஆரம்பித்து ,

இதோ இரண்டு மணிநேரம் ஆயிற்று..

அதோ என் அறை தெரிகிறது.. உங்களிடம் அடுத்து பேசுகிறேன்.. நான் தூங்க வேண்டும்...

சரியாக ஆறு மணி நேரம் கழித்து..

நான் சரியாக உறங்க வில்லை என சொல்ல வேண்டியது இல்லை..

இதோ உடை மாற்றி ஒரு புது வித மேக்கப் செய்து கொண்டு வெளியே வந்தேன்...

மனதுக்குள் ஜெம்ஸ் பாண்ட் படத்தில் வரும் இசை..

அந்த தெருவுக்கு போனேன்.. இப்போது நான் போனது என் நண்பனிடம் இரவல் வாங்கிய யமகாவில் ..

அதோ அந்த சிவப்பு பனியன் போடடிருன்த்தவன்.. இப்போது வெள்ளை சட்டையில்..

ஐயோ என்னைப் பார்த்து விட்டான்... அவனை தாண்டி சென்று அவனை திரும்பி பார்த்தேன்..

டேய் தரணி அவன புடி.. சொல்லியது காதில் விழுந்தது...

ஆனால் என் பின்னால் பார்த்தபடி சொல்கிறானே..

திரும்புவதற்குள் ஒரு கரம் என்னை பற்றியது.. சுதாரித்து பிரேக் போட்டேன்..

ஐயோ நான் காலி..

தரணி என்பவன் அஜானுபகுவாக இருந்தான்..

வாங்க சார் உங்க கிட்ட பேசணும்.. அவன் குரல் கர்ண கொடுரம்..

அதே வீட்டுக்குள் நான் அழைத்துச் செல்லப் பட்டேன்.. இல்லை இழுத்துச் செல்லப்பட்டேன்..

என்னை போட்டோ எடுக்க யாரவது வருவார்களா? யாரவது வாங்களேன் இப்போது பகல் நேரம்.. பிளாஷ் கூட தேவை இல்லை..

எனக்குள்ளே மனது இருந்தாலும் அது தனக்குளே பிதற்ற ஆரம்பித்தது...

உள்ளே சென்றவுடன் சாந்தமாய் ஒரு பெரியவர் குறுந்தாடியுடன்.. ஓஹோ இவர் தான் பெரிய வில்லன் போல..

என்ன தம்பி நேத்து நைட் என்னமோ போட்டோ எடுத்திங்க போல..

அவர் கேட்டவுடன் வியர்த்து..

சாரி சார்.. இதோ இந்த கேமரா தான் .. குடுக்குறேன் என்னை ஒன்னும் பண்ணிடாதிங்க..

ஹா ஹா ஹா.. எல்லோரும் ஏளனமாக சிரித்தார்கள்..

சரி போங்க... பிலிம் ரோலை உருவிக்கொண்டு காமெராவை தூக்கி போட்டார்..

தம்பி.. திரும்பி நடக்க ஆரம்பித்தவனை அவர் குரல் தடுத்தது...

போகிறப்போ வாசல்ல இருக்கு ஒரு போர்டு அத பார்த்துட்டு போங்க..

அப்போது தான் கவனித்தேன் பின்னால் அந்தப் பெண்.. நேற்று கழுத்து நெறி பட்டவள்..

அப்பா இன்னைக்கு எத்தன மணிக்கு கிளம்ப? கேட்டுக்கொண்டே வந்தாள்...

தலை சுற்றியது .. சீக்கிரம் வெளியே வந்து போர்டுஐ பார்த்தேன்..

ஹைதராபாத் தமிழ் சங்கம்..
தமிழ் மணி நாடகக் குழு..
ஹைதராபாத் - 25

Hyderabad Tamil Sangam
Thamilmani Drama Troop
Hyderabad - 25

தலை சுற்றியது இன்னும் வேகமாக.. உங்களுக்கும் கூடத்தானே?



Wednesday, July 15, 2009

ஒரு _________________ டைரியின் கடைசி பக்கங்கள்

சுற்றிலும் இரும்பு கம்பிகள்.. சிறை, கூண்டு, ,முகாம் என எதுவேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள்...

வெளியே வெறித்த படி பார்த்துக்கொண்டு இருந்தேன்

என்னுடைய இனத்தவரை ஒவ்வருவராக கூட்டிச் செல்கின்றனர்.. இல்லை தூக்கிச் செல்கின்றனர்..

பெரிய சுவருக்கு மறைவில் அவர்களை கொண்டு சென்றவுடன் ஒரு சத்தம்..

மரண ஓலம் கேட்டதுண்டா நீங்கள்?

முதலில்
இருக்கும் சக்தியை எல்லாம் சேர்த்து சத்தம் வரும்.. பிறகு மரணம் நெருங்க நெருங்க அதன் சத்தம் குறைந்து சிறிது நேரத்தில் காணமல் போகும்..

மரணத்தை விட கொடுமை ஒன்று உண்டு தெரியுமா??

மரணத்தை எதிர் நோக்கியபடி உள்ளவர்கள் கேட்கும் மற்றவர்களின் மரண ஓலம் தான்..

நாளை நாம் சாகும் போது இப்படி தான் ஓலமிடுவோம் என்ற ஒரு எண்ணம் போதும் எல்லா எலும்புகளிலும் சில்லிடும் அந்த குளிர்ச்சி கொடுமையானது ..

இதோ என் கண் முன்னே வெட்டப்பட்ட என் இனத்தவர்... துண்டு துண்டாக வெட்டப்பட்டு ... சிறிதும் இறக்கம் இல்லாமல்.. சே..

எப்போதடா என் முறை வரும் என்று மரணத்தை நேசிக்க மட்டும் தான் முடிகிறது.. அந்த நேசிப்பு மரண பயத்தையும் வென்ற நேசிப்பு...


இதோ கூண்டு திறக்கப் படுகிறது.. என் முறை வருகிறது என்று நினைக்கிறேன்..

நண்பர்களே முடிந்தவரை என் மரண ஓலத்தை கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.. மீறியும் கேட்டால் அது இயற்கையின் கோளாறு..

மீண்டும் சந்.....கோ ......

கோ.. கோக்கோ......

கோ.. கோ.. கோ...


.......இது ஒரு ப்ராய்லர் கோழி டைரியின் கடைசி பக்கங்கள்.....

ஒரு 18+ ஜோக்.. வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்..

எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு அசைவ ஜோக் .. பிடிக்காதவர்கள் இங்கு நிறுத்திக்கொள்ளலாம்.. ஓரக்கண்னால் தொடர்பவர்கள் தொடரலாம்

நம்மளுக்கு வயசு எழுவது எதோ ஒரு காரணம் அவர் ஒரு டாக்டர போயி பாக்குறார்.. அவரும் பார்த்துட்டு விந்தணு எண்ணிக்கை டெஸ்ட் பண்ணனும்னு டாக்டர் சொல்லிட்டார்...

எப்பிடி டாக்டர் கொண்டு வர்றதுன்னு கேட்டாரு நம்மாளு..

ஒரு சின்ன மூடியோட இறக்குற டப்பா மாதிரி இருந்தத குடுத்துட்டு இதுல கொண்டு வாங்கன்னு சொல்லிட்டார் நம்ம டாக்டர்..

அடுத்த நாள் வெறும் டப்பாவோட வந்தாரு நம்மாளு.. ஒண்ணும் பேசாம சரி நாளைக்கு வாங்கன்னு சொல்லிட்டார் டாக்டர்..

அடுத்த நாள் வந்தார்.. அபபவும் கையில காலி டப்பா தான்.. அப்படியே ஷாக் ஆயிட்டார் டாக்டர்.. என்னங்க என்ன ஆச்சுன்னு கேட்டார்..

இல்ல டாக்டர் முதல்ல நான் கை வச்சு ட்ரை பண்ணேன்.. முடியல .. கொஞ்ச நேரம் ட்ரை பண்ணதுல மூச்சு வேற வாங்க ஆரம்பிச்சது..

அப்பறம் என்னோட பொண்டாட்டி கூட ட்ரை பண்ணா.. அவ இன்னும் ரெண்டு கையும் வச்சு முயற்சி பண்ணா மொதல்ல..முடியலங்கவும் வாயல கூட ட்ரை பண்ணா ..

அதுவும் முடியாம போக தான் பக்கத்து வீட்டுக்காரம்மா வந்து ட்ரை பண்ணங்க.. அவங்களும் கைய வச்சு ட்ரை பண்ணங்க.. வாய் வச்சு ட்ரை பண்ணங்க ஒண்ணும் முடியல..

நேத்து அத தான் சொல்ல வந்தேன் நீங்க கெளம்ப சொல்லிடிங்க அப்படின்னாரு...

டாக்டருக்கு ஒண்ணுமே புரியல... நெஜம்மாவே பக்கத்து வீட்டு பொம்பளய எல்லாம் இத செய்ய சொன்னிங்களா? அதிர்ச்சியோட எல்லைல நின்னு கேட்டாரு..

அதுக்கு நம்மாளு ஆமா டாக்டர்.. அதனால தான் உங்க கிட்ட இந்த டப்பாவ குடுத்துட்டு மூடி லூசா இருக்குற டப்பாவா வாங்கிட்டு போலாம்னு வந்தேன் அப்படின்னாரு நம்மாளு..

டாக்டருக்கு மயக்கம் வராத குறை தான்...

Tuesday, July 14, 2009

ரசிகனும் ரஸ்ஸல் க்ரோவும்...


ரஸ்ஸல் க்ரோவ் க்லாடிஏடர் படத்தில் வந்தாரே அவர் தான்... மிகவும் அருமையான மனிதர் .. எல்லோரிடமும் நட்புடன் பழகுபவர்..

ஒரு விளம்பர படத்திற்காக சமிபத்தில் இந்தியா வந்திருந்தார்.. அவருக்கு ஆக்ரா தாஜ் மகாலில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது..

இடைவேளையின் போது அருகில் இருக்கும் எல்லோரிடமும் நன்றாக பேசிக்கொண்டு இருந்தார்..

இங்கு வந்த போது தாடி வைத்து இருந்தார்.. நன்றாக கோட் சூட்இல் கம்பீரமாக இருந்தார்

எல்லோரிடமும் நன்றாக பேசும் குணம் உடையவரை பார்த்தவுடன் ஆக்ரா சுற்றிப் பார்க்க சென்ற தமிழ் இளைஞர் குமாருக்கு அவரிடம் பேச வேண்டும் என்று ஆவல் எழுந்தது...

உடனே தாழ்வு மனப்பான்மையும் ஒட்டிக்கொண்டது.. அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு ஒருவாராக போய் பேசியே விட்டான்..

என்ன பேச எனத்தெரியாமல் உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டான் ..

அதுவரை பேசிக்கொண்டு இருந்தவர் ஒரு பார்வை பார்த்து அமைதி ஆகிவிட்டார்... ரஸ்ஸல் க்ரோவ் பற்றி நன்றாக தெரிந்தவருக்கு இது தெரியும் இருந்தாலும் அந்த கேள்வியை கேட்டவுடன் ஏன் அவர் மவுனமாகி விட்டார் தெரியுமா??













































விடை தெரிய மௌஸ் கொண்டு பிளாக் செய்து பார்க்கவும்..
>>> அவருக்கு தமிழ் தெரியாது.. ஹெஹெஹெ..<<

Wednesday, July 8, 2009

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் .. ஒரு புகைப்பட பயணம்..

நான் இந்த பதிவில் எதாவது எழுத தேவையும் இல்லை... அவசியமும் இல்லை. எல்லாம் படங்கள் சொல்லும் ..

இந்தப் புகைப்படங்கள் முழுவதும் என்னால் எடுக்கப்பட்டவை... படங்களை பாருங்கள் ரசியுங்கள்.. வாக்குகளை குத்துங்கள்..









































சில இடங்களில் ப்லர்ர் ஆனது போல இருக்கும்.. அது நான் லென்ஸ் துடைக்காமல் விட்டதுக்கு தண்டனை.. அது உங்கள் கண்களை உறுத்தி இருந்தால் மன்னிக்கவும்..

எப்போதும் போல் பிடித்தால் வாக்குகளை குத்தவும்..

Thursday, July 2, 2009

சார் போஸ்ட்..

"என்னடி என்ன சமையல் இன்னைக்கு?" கேட்டுக்கொண்டே வந்தார் கோபால்சாமி..

"ஆமா உங்களுக்கு நாக்குக்கு வக்கனயா சமைச்சு சமைச்சு போடுறேன்.. அங்க மதராஸ்ல என்னோட புள்ள என்ன சாப்பிடரானோ? என்ன செஞ்சானோ..?" விசாலாக்ஷி நொந்துகொண்டே தட்டை வைத்தாள்...

"பார்த்து டீ இது உங்க அப்பன் வீட்டு தட்டு இல்ல... நான் வாங்குனது.." சிரித்தார் கோபால்சாமி..

"ஆமாமா பெரிய வெள்ளி தட்டு.. வந்துட்டாரு .. புள்ள இப்போ.." என விசாலாக்ஷி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே

"நிறுத்துறியா? புள்ள புள்ள அப்பிடின்னு புள்ள புராணத்த.." இது கோபால்சாமி..

"உங்களுக்கு என்ன தெரியும்.. தாய் பாசத்த பத்தி...? " முறைத்தாள்.

"எனக்கு மட்டும் பாசம் இல்லையா? அந்த காலம் மாதிரியா? இந்த இருபதாம் நூற்றாண்டுல ஒரே ஊருல வேலை கிடைக்குதா? என்ன பண்ண அவன் படிச்சா டிகிரி படிப்புக்கு இங்க யாரு வேலை தருவா? சரி கடுதாசி எதுவும் வந்துருக்கா? " விசாரித்தார்..

"இனிமே தான் தபால் காரர் வரணும்ங்க.. " சொல்லிக்கொண்டு இருந்தவள் வாசலில் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள். .

"சார் போஸ்ட்.." தபால்காரர் போட்டு விட்டு போன கடிதத்தை எடுக்க சின்ன பிள்ளையாய் ஓடினாள்..

"பாருங்க என்னோட புள்ள தான் எழுதிருக்கான்.. அவனுக்கு ஆயுசு நூறு.." சிரித்தபடி அவரிடம் நீட்டினாள்.. "படிங்க"

"படிக்கிறேன் குடு" வாங்கினார்..

அன்புள்ள அம்மா அப்பாவுக்கு...

தங்கள் மகன் பிரியத்துடன் எழுதிக்கொள்வது.. இங்கு நான் நலம். நீங்கள் நலமுடன் இருப்பிர்கள் என நம்புகிறேன்..
இங்கு எனக்கு வேலை பிடித்துள்ளது.. பெரிய அலுவலகமாக உள்ளது.. அடுத்த மாதம் இங்கே எனக்கு பணி நிமித்தமாக Training உள்ளது.. எங்களுடைய அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பயிற்சி தரப்போகிறார்கள்..
அம்மா நீங்கள் குடுத்தனுப்பிய முறுக்கு என்னுடைய நண்பர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.. ஒரே நாளில் தீர்ந்துவிட்டது.. நீங்கள் டாக்டரை போய் பார்த்திர்களா? அடுத்தமாதம் நூறு ரூபாய் சேர்த்து அனுப்புகிறேன்.. மருத்துவ செலவுக்கு வைத்துக் கொள்ளவும்.. மற்றபடி இங்கே எல்லாம் நலமாக உள்ளது..

இப்படிக்கு

தங்கள் அன்பு மகன்,

சேகர்..
12/07/93

படித்து முடித்தார் கோபால்சாமி..

"அடுத்த தடவ முறுக்கு கொஞ்சம் ஜாஸ்தி குடுத்துவிடனும்.. புள்ளைக்கு சாப்பிட கிடைக்கலயாமே.." முனுமுனுத்தாள் ..

"அசடு அசடு.. என்னவோ போ.." கோபால்சாமி சிரித்துக்கொண்டார்..

>>>அடுத்த ஆறாவது நாள்..

"என்னம்மா விசாலாக்ஷி என்ன பண்ணிட்டு இருக்கே?" கேட்டுக்கொண்டே நுழைந்தார் அவர் அண்ணன் ஸ்ரீனிவாசன்..
"வாங்கண்ணா.. நல்ல இருக்கிங்களா ? அண்ணி வரலியா?" கேட்டாள்.
"எல்லாரும் நல்ல சௌக்கியம் .. அவ வீட்டுல இருக்கா.. நான் வக்கீல பார்த்துட்டு போலாம்னு வந்தேன். அப்படியே உன்னையும் பார்த்துட்டு போலாமேன்னு வந்தேன்.." சொன்னார்.. "என்ன சேகர் கடுதாசி எதுவும் போட்டு இருக்கிறானா? "
கேட்டார்..
"ஆமா அண்ணா.. இந்தாங்க படிங்க.." நீட்டினாள்..

"என்னம்மா வந்து ஆறுநாள் தான் ஆறது போல? ஒரு வருஷம் ஆனா மாதிரி பழசாயிடுச்சு? இதே தான் நித்தமும் படிச்சுட்டே இருக்கியா? " சிரித்த முகத்துடன் கேட்டார்..

"என்ன பண்ண அண்ணா.. புள்ளைய வேற ஊருக்கு அனுப்புனாலே இப்படி தான் பண்ண வேண்டி இருக்கு.. என்ன பண்ண.." சொன்னாள் பெருமூச்சுடன்..

>>>>>> பதினான்கு வருடங்கள் கழித்து..

"டேய் சேகர்.. லீவுக்கு சுமதியையும் பேரனையும் இங்க ஊருக்கு அனுப்பு டா.. பார்க்கணும்போல இருக்கு.." கோபால்சாமி செல் போனில் பேசிக்கொண்டு இருந்தார்..

"சரிப்பா.. பார்க்கலாம்.." சேகர் மறுமுனையில் இருந்து..

>> அதன் பதினைந்தாவது நாள்..

"தாத்தா.. " கத்திக்கொண்டே ஓடி வந்து கட்டிக்கொண்டான் பத்து வயது பேரன் கிஷோர்..
"வாடா வாடா.. கன்னுகுட்டி.. இப்போதான் தாத்தாவ பார்க்கணும்னு ஞாபகம் வந்ததா?" உச்சி முகர்ந்துட்டே சொன்னார் கோபால்சாமி..
"வணக்கம் மாமா.. "பின்னால் வந்தால் சுமதி...
சில பல விசாரிப்புகளுக்கு பின்னர் இரவு...

தாத்தா பக்கத்தில் பேரன் படுத்து இருந்தான்.. சற்று முன் தான் அவன் அப்பாவுடன் பேசி இருந்தார்கள்..

"தாத்தா.. எனக்கு ஒரு டவுட் .."

"சொல்லுடா தங்கம்.."

"இப்போ எல்லாம் செல் போன் இருக்குல்ல? முன்னாடி இதை கண்டு பிடிக்காதப்போ என்ன பண்ணிங்க?"

"ஹா ஹா,.. அப்போ எல்லாம் லெட்டர் தான் செல்லம்.."

"லெட்டர்ஆ? அதுல எல்லாம் எழுதிடுவாங்களா? SMS மாதிரி இருக்கும் இல்ல தாத்தா? "

"ஆமா ப்பா.. அது கொஞ்சம் பெரிய sms.."

"ஒரு லெட்டர் வர ரொம்ப நாள் ஆகுமே தாத்தா.. "

"ஆமா டா கண்ணு .. "

"அப்ப அதுல பேசிக்க முடியாதே.. ரொம்ப கஷ்டமா இருக்கும்ல?"

"கஷ்டம் தான் .. ஆனா அது எல்லாம் கொஞ்சம் சுகமா தான்டா இருக்கும்.."

"புரியல தாத்தா"

"சொல்றேன்...இப்போ எல்லாம் நினச்ச நேரத்துல பேசுறோம்.. அப்போ உங்கப்பா முதல் வேலைல சேர்ந்த சமயம்.. ஆனா அப்போ வாரதுதுக்கு ஒரு தடவ தான் கடுதாசி போடுவோம்.. வரும்.. அதுக்காக காத்துகிட்டு இருப்போம்.. வாரம் முழுக்க உங்கப்பாவ நினச்சுகிட்டு ஒரு நாள் மட்டும் வருகிற கடுதாசிய காத்திருந்து படிக்கிறது ஒரு சுகமப்பா.. இப்போ எல்லாம் நீ நெனச்ச ஒடனே உங்கப்பாகிட்ட பேசிடலாம்.. பேசிட்டு அப்போதைக்கு மறந்த்துருவே.. அதுக்காக உனக்கு அப்பா மேல பாசம் இல்லன்னு சொல்லல..அந்த நெனப்பு கொஞ்சம் கொறஞ்சுடும்.. அப்போ அப்படி இல்ல.. "

"தாத்தா நெனச்ச உடனே பேசுறது தான சந்தோசம்? நீங்க இப்படி சொல்றிங்க? எனக்கு புரியல..."

"சரி கண்ணு.. உங்கப்பாவ உனக்கு புடிக்குமா?"

"ஓ ரொம்ப .. உங்களுக்கே தெரியுமே தாத்தா... I miss him here"

"தெரியும் பா.. நான் சொல்றத நீ பண்ணுறியா?"

"சொல்லுங்க தாத்தா... "

"இன்னும் ஊருக்கு போறதுக்கு மூணு நாள் இருக்கு.. உங்கப்பாகிட்ட பேசவே பேசாத போன்ல.. உனக்கு அப்பா நினைப்பு தோணும் போதெல்லாம் ஒரு நோட் புக்ல என்ன பேச நினைக்கிறியோ எழுது.. இதை யாரு கிட்டயும் சொல்லாத.. என்ன? அப்போ உனக்கு புரியும்.."

"சரி தாத்தா செஞ்சு பாக்குறேன்.."

<<< அடுத்த மூணு நாள்.. கிஷோர் வாடிய முகம், அவன் சோகம் .. அவன் அப்பா என்ன ஆச்சு பேசவே இல்லை என்னும் விசாரிப்பு.. கிஷோர் உடன் ஒரு நோட் புக் எப்போதும்.. சுமதி மற்றும் கிஷோர் விடுமுறை முடித்து கிளம்புதல்..<<

"வீடே வெறிச்சோடி போச்சுங்க .. " விசாலாக்ஷி பேரனை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தாள்.. செல் சிணுங்கியது...

"இந்தாங்க உங்க மகன் பேசணுமாம் உங்ககிட்ட.. " புருசனிடம் கொடுத்தாள்..

"அப்பா தேங்க்ஸ் பா.." எதிர் முனையில் இருந்து சேகர் சொன்னான்..

"எதுக்கு டா?" கேட்டார் கோபால்சாமி..

"என்னோட மகன் என் மேல எவ்வளவு பாசம் வச்சு இருக்கிறான் என எனக்கு தெரிய வச்சதுக்கு...அவனோட ஒரு நோட் புக்கும் கொண்டாந்தான்.. அது தான்பா என்னோட வாழ்க்கையில கெடச்ச பெரிய பொக்கிஷம்.. எல்லாத்தையும் சொன்னான்.. நீங்க really great ப்பா.." சந்தோசத்தில் அவன் குரல் கொஞ்சம் உடைந்தது..

சிரித்துக்கொண்டார் கோபால்சாமி..

>>> அதன் ரெண்டு நாள் கழித்து..

"சார் போஸ்ட் " தபால்காரரின் குரல் வித்யாசமாய் ஒலித்தது அந்த வீட்டில்..

பிரித்தார் கோபால்சாமி..

தாத்தா...
நான் நல்லா இருக்கேன்.. நீங்க? பாட்டி ? நல்ல இருக்கிங்களா ??
நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன் .. அப்பாகிட்ட போன உடனே நோட் புக்க குடுத்துட்டேன் அவருக்கும் ரொம்ப சந்தோசம் தாத்தா.. நீங்க சொன்னது இப்போ புரியுது தாத்தா..

bye bye
take care..
with luv
kishore..

கோபால்சாமி கடித்ததை மடித்து பத்திரமாக வைத்துக்கொண்டார்..

>> சில மணிநேரம் கழித்து..

தபால் பெட்டியில் பேரனுக்கு எழுதிய கடிதத்தை போட்டுவிட்டு அடுத்த வாரத்து பேரனின் கடிதத்தை எண்ணி காத்திருக்க தொடங்கினார் கோபால்சாமி....