Friday, June 26, 2009

சுள்ளான் பேர சொன்னா....

அண்ணே அக்கா..

இந்த பயபுள்ள கொஞ்சம் ஓவரா பேசுவான்..
அப்பறம் கொஞ்சம் திருவாலித்தனம் செஞ்சுட்டு திரியிறவன்,,
சேட்ட கொஞ்சம் ஜாஸ்தி தான்..
ஆனா பாசக்கார பய...

நல்ல பெரியவுக எழுதுறதா பார்த்து இவனுக்கும் ப்லாக் எழுத ஆச வந்துடுச்சு..
இதுக்கு முன்னாடி கொஞ்சநாள் நிழல்படம் nizhalpadam.blogspot அப்பிடின்ன விலாசத்துல எழுதிட்டு தான் இருந்தான்.. ஆனா இதப்போயி எவன் கண்ணு வச்சானோ.. ntamil அப்பிடின்ன படுபாவிப் பயலால பொசகெட்டு போச்சு..

கூகிள் காரன் என்ன இவன் மாப்பிள்ளையா? ஒடனே தூக்கிட்டான்.. அட ப்லோகன்ங்க..

சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சான் பயலுக்கு பொழுது போகணும்ல? அதனால கொஞ்ச நாள் முன்னாடி ரசிச்சு ரசிச்சு தியேட்டர்லயேய் ரெண்டுவாட்டி பாத்த படமான பசங்க படத்துல இருந்து இவன மாதிரியே ஒரு சுள்ளான் சொல்ற வசனத்த சுட்டு ஒரு பலோக திரும்பவும் ஆரம்பிச்சுட்டான்..

எனவே மக்களே.. அப்பப்போ இங்கிட்டு வந்துட்டு போனிங்கன்னா நல்லா இருக்கும்...


ஆனா ஒன்னே ஒன்னு... நாங்க பயப்படவே மாட்டோம்ல.. எப்புடீ ???

1 comment: