Thursday, July 30, 2009

அர்த்தம் புரியவில்லை.. அனுபவம் பழையதில்லை.. கவுஜ

கிட்டப்பார்வையில்
கிறங்கும் ஆவியில்
வட்டப்பாறையில்
வருடும் காற்றினில்
நெட்டு நீள் வளர்
செவ்விளநீர் தளர்
ஓட்டும் ஈரமாய்
உயிரின் ஓரமாய்
சொட்டும் நீரினில்
சொருகும் காதலில்
வெட்டும் வேல்விழி
வெட்கப் போர் கழி
தட்டும் தரையோடு
தழுவும் கரத்தோடு
பார்வை பதறியதே
பற்கள் இறுகியதே
நாவும் நடனத்துடன்
நீட்டி முழக்கிடவா
என்றே கேட்கிறதே


என்ன இவையெல்லாம்
எனக்கே தெரியவில்லை
அர்த்தம் புரியவில்லை
அனுபவம் பழையதில்லை
காதலை சொல்ல வந்தால்
கவிதை வந்திடுமோ?
அர்த்தம் ஒன்றுமின்றி
வந்தால் குறைந்திடுமோ?
காதலை ஏற்றிடு வா..
அதையும் கற்று மறப்போம்..

முதல் பாதி கவுஜ 'பிரபல' பதிவர் ஆகும் முயற்சியில் எழுதியது.. எனக்கே புரியவில்லை.. நிஜமாக..
இரண்டாம் பாதி முதல் பாதியை justify செய்வதாக எழுதி உள்ளேன்..

1 comment:

  1. வாங்க அய்யா! வாங்க!!
    நான் காரைக்குடிதான்.
    நம்ம கடைக்கு வாங்க!!

    ReplyDelete