Friday, July 17, 2009

குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...

மணியை பார்த்தான் இரவு இரண்டு மணி..

ஹைதராபாத் பனிகால குளிர் இரவில் குளிர் இன்னும் அதிகமானதை உணர்ந்து இருந்தான்.. ஆனாலும் வியர்வை பூத்து இருந்தது..

நடையின் வேகத்தை கூறினான்.. தூரத்தில் ஒரு நாய் குலைத்தது..

அது ஒரு செயின் ரியாக்சன் போல அவன் அருகில் இருந்த நாயை குலைக்க வைத்தது..

காறி எச்சிலை துப்பினான் .. எச்சில் துப்பினால் நாய் பின் தொடராது என்று யாரோ சொல்லி கேட்டு இருந்தான்...

கையில் மட்டும் அது பத்திரமாக.. ச்சே போட்டோகிராபர் தொழிலுக்கு ஏன் தான் வந்தோமோ? நொந்து கொண்டேன்

விடிந்ததும் என்னை தேடுவர்களா? கண்டு பிடித்தால் உயிருடன் விடுவார்களா? நினைக்கும் போது சில்லிட்டது...

உங்களுக்கு தெரிந்திரிக்கும் ஏன் கையில் உள்ளது ஒரு கேமரா..

இரண்டு மணி நேரம் முன்னால்...

இரவுக் காட்சி முடித்து விட்டு வந்து கொண்டு இருந்தவன் ஒரு சத்தத்தை கேட்டு நிமிர்ந்தான்..

அகால வேளையில் ஒரு அனத்தும் சத்தம்..

உடலுறவு கொள்கிறார்களா? விவகாரமான சிந்தனை முளைத்தது..

ஒரே ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்தது.. எட்டி பார்கலாமா? என்னுடைய பகுதி நேர பத்திரிகையாளன் மூளை வேலை செய்தது..

சாக்கடை எங்காவது திறந்திருக்கும், போலீஸ் காரன் யாரவது லஞ்சம் வாங்குவான் என எந்த நேரத்திலும் எதாவது படம் பிடிக்கலாம் செய்தி ஆக்கலாம் என்று எப்போதும் என் உடன் இருக்கும் ஒரு சின்ன கேமரா எனக்குள் கனத்தது...

எட்டி பார்த்தேன்.. இப்போது தனியாக உள்ள வீட்டில் விளக்கெரியும் அறை நோக்கி சென்றேன்.. வேலிச் சுவர் மேல் நின்றேன் ..

"வாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழியே காற்று வரத்தான் செய்யும்"


எங்கோ படித்த நினைவு.. சாளரத்தை பார்த்தேன்..

ஜன்னல் மேல் உள்ள மழை தடுப்பு சுவர் மேல் ஏறி நின்றேன்.. ஆம் உண்மை தான்..
வாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழியே காற்று வரத்தான் செய்யும்

நான் பார்த்தது இரண்டு ஆசாமிகள் ஒரு பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்தார்கள்..

அதை இன்னும் இருவர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்..

சிவப்பு பனியன் அணிந்த ஒருவன் அந்த பெண்ணை பார்த்து சொத்து பத்திரத்தில் கைஎழுத்து போட மாட்டே? என்றபடி கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்தான்.. பக்கத்தில் கத்தை பேப்பர் அட்டையில் கிளிப் செய்யப்பட்டு இருந்தது...

சிலிர் என்று எங்கோ இருந்து வந்த காற்று என்னை ஊடுருவியது...

உடனே கேமரா எடுத்தேன்..

கிளிக்..

கிளிக்...

நழுவியது கேமரா..

நல்லவேளை பிடித்துக் கொண்டேன்..

மறுபடி கிளிக்.. அட நழுவும் போது பிடித்ததில் பிளாஷ் ஆன் ஆகிவிட்டது...

அதில் ஒருவன் அதை பார்த்துக் கொண்டே இருந்தான்..

ஹெய்.. நில்லு.. உன்னதான்... அந்த சிவப்பு பனியன் என்னைபார்த்து கத்தினான் ...

அவன் ஓடி வர எத்தனிப்பது தெரிந்தது..

ச்சே ... இங்கேயுமா தமிழ் ரௌடிகளிடம் மாட்ட வேண்டும்?


ஏறிய வழியில் இறங்கி.. ஓட ஆரம்பித்து ,

இதோ இரண்டு மணிநேரம் ஆயிற்று..

அதோ என் அறை தெரிகிறது.. உங்களிடம் அடுத்து பேசுகிறேன்.. நான் தூங்க வேண்டும்...

சரியாக ஆறு மணி நேரம் கழித்து..

நான் சரியாக உறங்க வில்லை என சொல்ல வேண்டியது இல்லை..

இதோ உடை மாற்றி ஒரு புது வித மேக்கப் செய்து கொண்டு வெளியே வந்தேன்...

மனதுக்குள் ஜெம்ஸ் பாண்ட் படத்தில் வரும் இசை..

அந்த தெருவுக்கு போனேன்.. இப்போது நான் போனது என் நண்பனிடம் இரவல் வாங்கிய யமகாவில் ..

அதோ அந்த சிவப்பு பனியன் போடடிருன்த்தவன்.. இப்போது வெள்ளை சட்டையில்..

ஐயோ என்னைப் பார்த்து விட்டான்... அவனை தாண்டி சென்று அவனை திரும்பி பார்த்தேன்..

டேய் தரணி அவன புடி.. சொல்லியது காதில் விழுந்தது...

ஆனால் என் பின்னால் பார்த்தபடி சொல்கிறானே..

திரும்புவதற்குள் ஒரு கரம் என்னை பற்றியது.. சுதாரித்து பிரேக் போட்டேன்..

ஐயோ நான் காலி..

தரணி என்பவன் அஜானுபகுவாக இருந்தான்..

வாங்க சார் உங்க கிட்ட பேசணும்.. அவன் குரல் கர்ண கொடுரம்..

அதே வீட்டுக்குள் நான் அழைத்துச் செல்லப் பட்டேன்.. இல்லை இழுத்துச் செல்லப்பட்டேன்..

என்னை போட்டோ எடுக்க யாரவது வருவார்களா? யாரவது வாங்களேன் இப்போது பகல் நேரம்.. பிளாஷ் கூட தேவை இல்லை..

எனக்குள்ளே மனது இருந்தாலும் அது தனக்குளே பிதற்ற ஆரம்பித்தது...

உள்ளே சென்றவுடன் சாந்தமாய் ஒரு பெரியவர் குறுந்தாடியுடன்.. ஓஹோ இவர் தான் பெரிய வில்லன் போல..

என்ன தம்பி நேத்து நைட் என்னமோ போட்டோ எடுத்திங்க போல..

அவர் கேட்டவுடன் வியர்த்து..

சாரி சார்.. இதோ இந்த கேமரா தான் .. குடுக்குறேன் என்னை ஒன்னும் பண்ணிடாதிங்க..

ஹா ஹா ஹா.. எல்லோரும் ஏளனமாக சிரித்தார்கள்..

சரி போங்க... பிலிம் ரோலை உருவிக்கொண்டு காமெராவை தூக்கி போட்டார்..

தம்பி.. திரும்பி நடக்க ஆரம்பித்தவனை அவர் குரல் தடுத்தது...

போகிறப்போ வாசல்ல இருக்கு ஒரு போர்டு அத பார்த்துட்டு போங்க..

அப்போது தான் கவனித்தேன் பின்னால் அந்தப் பெண்.. நேற்று கழுத்து நெறி பட்டவள்..

அப்பா இன்னைக்கு எத்தன மணிக்கு கிளம்ப? கேட்டுக்கொண்டே வந்தாள்...

தலை சுற்றியது .. சீக்கிரம் வெளியே வந்து போர்டுஐ பார்த்தேன்..

ஹைதராபாத் தமிழ் சங்கம்..
தமிழ் மணி நாடகக் குழு..
ஹைதராபாத் - 25

Hyderabad Tamil Sangam
Thamilmani Drama Troop
Hyderabad - 25

தலை சுற்றியது இன்னும் வேகமாக.. உங்களுக்கும் கூடத்தானே?



3 comments: